Ad

Thursday, 27 April 2017

Sollathan ninaikkiren song

சொல்லத்தான் நினைக்கிறேன்... 
சொல்லாமல் தவிக்கிறேன்.. 
காதல் சுகமானது.. 
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்.. 
தேடல் சுகமானது.. 
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல.. 
வெக்கங்கள் வர வைக்குறாய்.. 
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்.. 
தனியே அழ வைக்குறாய்.. 
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது.. 
காதல் சுகமானது..! 

(சொல்லத்தான்) 

சின்ன பூவொன்று பார்வையை தாங்குமா.. 
உன்னை சிறகு எண்ணி தூங்குமா.. 
தனிமை உயிரை வதைக்கின்றது.. 
கண்ணில் தீவைத்து போனது ஞாயமா.. 
என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா.. 
கொழுசும் உன் பெயர் சபிக்கின்றது.. 
தூண்டிலனை தேடும் ஒரு மீன்போல ஆனேன்.. 
துயரங்கள் கூட அட சுவையாகுது.. 
இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் .. 
ரொம்ப ருசிக்கின்றது..! 

(சொல்லத்தான்) 

ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா.. 
நீயும் ஆனந்த பைரவி ரகமா.. 
இதயம் அலை மேல் சருகானதே.. 
ஒரு சந்தன பௌர்னமி ஓரத்தில்.. 
வந்து மோதிய இரும்பு மேகமே.. 
தேகம் தேயும் நிலவானதே.. 
காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட 
கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது.. 
சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய்.. 
ஏன் குடை சாய்ந்தது.. 
காதல் சுகமானது..!

No comments:

Post a Comment

Enna solla aethu solla by Thangamagan

என்ன சொல்ல, ஏது சொல்ல, கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல! என்னென்னவோ உள்ளுக்குள்ள, வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள! சின்னச் சின்ன...